எரிவாயுவை விநியோகிக்க அனுமதி! வெளிவந்தது புதிய அறிவிப்பு
#Laugfs gas
#Litro Gas
Mayoorikka
2 years ago
சில நிபந்தனைகளின் கீழ், நாளை முதல் எரிவாயுவை சந்தைக்கு வெளியிடுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
* முன்பு இறக்குமதி செய்யப்பட்ட சிலிண்டர்களை வெளியிடக்கூடாது
* மெர்காப்டனின் நிலையான சதவீதத்தைச் சேர்க்கவும்
* ஒவ்வொரு 100 சிலிண்டர்களிலும் ஒரு சிலிண்டர் பரிசோதிக்கப்படவேண்டும். போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடுமுழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது.