நாட்டில் விறகு விற்பனை அதிகரிப்பு

Prathees
2 years ago
நாட்டில் விறகு விற்பனை அதிகரிப்பு

ஹட்டன் உட்பட பெருந்தோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட முக்கிய நகரங்களில் எரிவாயு விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்த நாட்களில் விறகு விற்பனை அபரிமிதமாக அதிகரித்துள்ளதாக விறகு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விறகு விற்பனை செய்யும் வியாபாரிகள், மொத்தமாக தங்கள் கடைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

எரிவாயுவைப் பயன்படுத்திய பெருமளவிலான நுகர்வோர் தற்போது தங்களிடம் இருந்து கறுவா மரவிறகுகளைக் கொள்வனவு செய்வதாக விறகு வியாபாரம் செய்யும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு கட்டு கறுவா மர விறகு சுமார் ரூ.50 வரை விற்பனை செய்வதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!