தாயின் உடல் பாகங்களை தானம் செய்ய முன்வந்த பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்

Reha
2 years ago
தாயின் உடல் பாகங்களை தானம் செய்ய முன்வந்த பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்

இலங்கை, திருகோணமலை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாயை காப்பாற்ற முடியாத நிலையில் அவரது உடற்பாகங்களை தான நோக்கோடு தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்த சம்பவம். திருகோணமலையில்  ஒரு தாழ் மன நிலையை ஏரற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் தாயின் உடல் பாகங்களை தானம் செய்ய பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் முன்வந்துள்ளனர். இது தொடர்பாக கண்காணிக்க திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து விசேட வைத்திய குழுவொன்று ஹெலிகொப்டர் மூலம் இன்று விஜயம் செய்துள்ளனர்.

நிலாவெளி- ஆறாம் கட்டை இரண்டாவது ஒழுங்கையில் வசித்து வந்த டி.சசிரேகா  தனியார் கம்பெனியொன்றில் சுத்திகரிப்பு தொழிலாளியாக கடமையாற்றி வந்துள்ள நிலை அதிக இரத்த அழுத்தத்தினால், நரம்பு வெடிப்பு ஏற்பட்டு அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிற்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குடும்பத்தினருக்கு வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

உடலில் அனைத்து பாகங்களும் ஒழுங்காக செயற்பட்டு வருவதாகவும் தலையிலுள்ள நரம்பில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த பெண்ணின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் பெண்ணின் உடற் பாகங்களான சிறுநீரகம், இதயம் போன்றவற்றை தானம் செய்வதற்கு முன்வந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

பெண்ணிற்க்கு சிறுநீரகம், இதயம் போன்றவற்றில் நோய்கள் இல்லாததால் பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் அனுமதியுடன் இரண்டு சிறுநீரகங்களும், இருதயம் ஆகியவை பெறப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் உடற் பாகங்கள் தானம் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது. என பலர் கூறுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!