நாடு மீண்டும் முடக்கம்: ஆராய்கிறது அரசு!
#Corona Virus
#Covid 19
Mayoorikka
2 years ago
பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்ளலாம் என்பதால், இம்மாத நடுப்பகுதியில் இரண்டு வாரகால முடக்கமொன்றை அமுல்படுத்த அரசு ஆராய்ந்து வருகிறது.
இதன்படி டிசெம்பர் 23 ஆம் திகதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை நாட்டை சுகாதார கட்டுப்பாடுகளுடன் முடக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒமைக்ரொன் வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , சுகாதார கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு தீர்மானித் துள்ளது.