ஒரு உயிரைக் காப்பாற்ற இதயத்தையும் சிறுநீரகத்தையும் தானம் செய்த பெண்
#Trincomalee
Prathees
2 years ago
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் முன்வந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நிலாவெளி பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய பெண்ணே உயர் இரத்த அழுத்தம் மற்றும் நரம்பு முறிவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த பெண்ணின் இதயம் மற்றும் சிறுநீரகம் மற்றொரு நோயாளிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.