பாராளுமன்றத்தில் முதன்முறையாக நடந்த சம்பவம்!
Mayoorikka
2 years ago
பாராளுமன்ற வரவு - செலவுத்திட்ட விவாதம் இன்று மூன்று மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
பட்ஜெட் விவாதம் இவ்வளவு குறுகிய காலத்துக்கு மட்டுப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (6) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 12.30 மணியளவில் நிறைவடைந்தது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுவதாக குற்றம் சுமத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இன்று ( 6) பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை புறக்கணித்தனர்.
இந்த நிலையில் சபை அமர்வு நாளை (7) வரை ஒத்திவைக்கப்பட்டது.