சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை ஆரம்பம்
Prathees
2 years ago
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று (07) மீண்டும் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நவம்பர் 15ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டு 22 நாட்களின் பின்னர் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.