ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை! மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது
உறவினரை வெட்டிக் கொலை செய்தமை மற்றும் அவரது தந்தையை கல்லால் அடித்துக் கொலை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களுக்கு குருநாகல் மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வதாக பொலிஸில் முறைப்பாடு செய்த சம்பவம் ஒன்றின் அடிப்படையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தரவினால் 22.08.2019 அன்று வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை செய்து குறித்த தீர்ப்பை உறுதி செய்தது.
11.4.2015 அன்று பொல்கஹவெல பொஹரவத்த பிரதேசத்தில் இந்த கொலை இடம்பெற்றுள்ளத.
நிஸ்ஸங்க விஜேவீர என்ற நபரின் கழுத்து தலையில் இருந்து துண்டிக்கப்பட்டதுடன், உடலின் 17 பாகங்கள் வெட்டப்பட்டிருந்தன. உயிரிழந்தவரின் தந்தை, பி.சி. ஜி. ஆரியதாச என்பவர் மீது கல்லெறிதல் மற்றும் பலத்த காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி, முதல் மூன்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்ததுடன் நான்காவது குற்றவாளிகளை விடுதலை செய்து உத்தரவிட்டார்.