சபுகஸ்கந்த எரிபொருள் நிலைய பணிகள் மீள ஆரம்பம்!

Mayoorikka
4 years ago
சபுகஸ்கந்த எரிபொருள் நிலைய பணிகள் மீள ஆரம்பம்!

களஞ்சியப்படுத்தப்பட்ட மசகு எண்ணெய் நிறைவடைந்ததால் மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எரிபொருள் நிலைய சுத்திகரிப்பு பணிகள் சற்றுமுன்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் இந்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

எதிர்வரும் 2 வாரங்களில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளது.

ஜனவரி மாத நடுப்பகுதியிலும், எரிபொருளை ஏற்றிக் கொண்டு மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4