யாழில் பட்டப்பகலில் 14 பவுண் நகை கொள்ளை
#Police
#Jaffna
Prathees
2 years ago
யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் 14 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சங்கானை - நிற்சாமம், சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகில் உள்ள வீட்டில் குறித்த திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றுக்காலையில் குறித்த வீட்டில் உள்ளவர்கள் கொண்டாட்டம் ஒன்றிற்கு சென்றுவிட்டு பி.ப. 5 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டினை அவதானித்த போது கதவு உடைத்து நகை களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளவாலை பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.