பாகிஸ்தான் பிரதமர் - கொல்லப்பட்டவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் தொடர்ந்து குடும்பத்துக்கு கொடுக்குமாறு உத்தரவு.
கொலை தொடர்பில பல செய்திகள் ஊடங்களில் வெளியாகிக்கொண்டிருக்கும் வேழையில், இச்செய்தயால் அக்குடும்பத்துக்கு பாகிஸ்தான் பிரதமர்மீது ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது.
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பிரஜை பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு மாத சம்பளத்தை தொடர்ச்சியாக வழங்கவுள்ளதாக பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இதற்காக சியல்கோட் நகர வர்த்தக சங்கம் நிதியமொன்றை ஆரம்பித்துள்ளது.
இந்த நிதியத்திற்கு இதுவரை ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் சேர்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கட்டாயம் பாகிஸ்தானிய சட்டப்படி தண்டிக்கப்படுவர் எனவும் குறிப்பிட்டார்.
எதுவாக இருந்தாலும் இவ்வளவு தூரம் பலர் சேர் ந்து இவரை கொல்வதற்க்கு காரணம் ஏதும் இருக்கலாம் எனவும் சில உடகங்கள் சந்தேகம் தெருவிக்கிறது.
இந்த வழக்கு நீதிம்ண்றத்துக்கு வரும்போதுதான் இதன் உண்மை தன்மை விளங்கும் எனவும் கூறப்படுகிறது. இரு ந்தும் இப்படியான வன்முறையையும் பாகிஸ்தான் மக்கள் விரும்பவில்லை எனவும், இப்படி இனிமே நடைபெர இடமழிக்ககூடாது எனவும் பொது பாகிஸ்தானிய அமைப்புக்கள் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.