ரணில் தொடர்பான செய்தி பொய்யானது. ஊடகங்கள் பொய்யைப் பரப்பவேண்டாம் - அமைச்சர் எச்சரிக்கை.
#Ranil wickremesinghe
Prasu
2 years ago
இன்று பல ஊடகங்கள் அரசாங்கத்தில் இக்கட்டான சூழலை வைத்து சில செய்திகளை புனை ந்து புழுகித் தள்ளுகின்றன.
அதில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார் என வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இதன்போது, எதிர்வரும் ஜனவரி மாதம் பிரதமர் பதவியல் மாற்றம் ஏற்படும் என்ற கருத்து நிலவுவதாகவும், இதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக அரசாங்கத்தின் கருத்து என்ன என ஊடகவியலாளரால் கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து அமைச்சர் குறிப்பிடுகையில், தயவுசெய்து ஊடகங்கள் இப்படியான பொய்களைப் புனையவேண்டாம் எனவும் கூறியுள்ளார்.