தேர்தல் செலவு மற்றும் பிரச்சாரத்தை கட்டுப்படுத்த புதிய சட்டம்

#Parliament
Prathees
4 years ago
தேர்தல் செலவு மற்றும் பிரச்சாரத்தை கட்டுப்படுத்த புதிய சட்டம்

சட்டவிரோத தேர்தல் செலவு மற்றும் பிரச்சாரம் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேர்தல் நீதித்துறை ஆணையத்தின் அதிகாரங்கள் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் மற்றும் தேர்தல்களின் கட்டமைப்பு மற்றும் விதிகளில் சீர்திருத்தங்களை அடையாளம் காணவும் தேவையான திருத்தங்களை சமர்ப்பிக்கவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்தக் கருத்துக்களை வெளியிட்டதாக சபைத் தலைவர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த தெரிவுக்குழு கூட்டம் நேற்று (08) சபைத் தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையில்  நடைபெற்றது.

தேர்தல் தொடர்பான செலவுகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட தொகையை நிர்ணயம் செய்வது பொருத்தமானது என தேர்தல்கள் ஆணைக்குழு குழுவில் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உத்தேச அங்கீகரிக்கப்பட்ட தொகையில் அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் வேட்பாளர்கள் தேர்தலில் செலவழிக்கக்கூடிய பணத்தின் அளவு சேர்க்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக செலவு செய்யும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் அல்லது வேட்பாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குழுவில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4