பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அஞ்சல் திணைக்கள தொழிற்சங்கங்கள்!

Mayoorikka
2 years ago
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அஞ்சல் திணைக்கள தொழிற்சங்கங்கள்!

அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர், சாந்த குமார மீகம தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை  அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சேவையுடன் தொடர்புடைய தங்களது பிரச்சினைகள் உள்ளிட்ட, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை 13ஆம் திகதி மாலை 4 மணிமுதல், 14 ஆம் திகதி நள்ளிரவுவரை இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!