லாவோஸில் குகைக்குள் சிக்கிய நபர் 10 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்பு
#Lanka4
#Rescue
#Missing
#Workers
#L4
Prasu
1 hour ago
லாவோஸில் வெள்ளப்பெருக்கால் குகைக்குள் சிக்கியிருந்த கிராமவாசிகளை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 10 நாட்களுக்கும் மேலாக குகைக்குள் சிக்கியிருந்தவர்களில் இரண்டாவது உயிர் பிழைத்த நபர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டுள்ளார்.
மிகவும் ஆபத்தான மற்றும் சவாலான சூழ்நிலையில் நடைபெற்ற இந்த மீட்பு நடவடிக்கையில், குகையின் குறுகிய மற்றும் வெள்ளநீர் நிரம்பிய வழித்தடங்களை கடந்து மீட்புப் பணியாளர்கள் அவரை வெளியே கொண்டு வந்தனர்.
குகைக்குள் சிக்கியிருந்த பலர் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, காணாமல் போன மற்றவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நெகிழ்ச்சியான மீட்புக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே