கைக்குண்டு வெடித்ததில் சிறுவன் பலி!
#Police
Prathees
2 years ago
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (12) மாலை கைக்குண்டு வெடித்ததில் 16 வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தோப்பூர் செல்வ நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
ஆட்டுக்கு இழை குழைகள் வெட்டச் சென்ற சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.