எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்லக்கூடிய 5 இராசியினர் - நீங்கள் என்ன இராசி.....?

Nila
2 years ago
எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்லக்கூடிய 5 இராசியினர் - நீங்கள் என்ன இராசி.....?

ஒவ்வோர் மனிதரும் ஒவ்வோர் விதம். ஒருவர் இன்னொருவரில் இருந்து குணவியல்புகளில் மாற்றமாக இருப்பர்.

சிலர் எதிர்காலத்தில் நடக்க உள்ளதை தன் மனதில் இப்படி நடக்கும் என்பதை முன்னரே உணரக்கூடியவராக இருப்பார்கள். ஜோதிடத்தின்படி அப்படிதான் உள்ளுணர்வால் புரிந்துகொள்ளக்கூடிய நபர்கள் யார், எப்படி அவர்கள் அந்த விஷயத்தைப் புரிந்து கொள்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

நம்மில் பலருக்கும் எந்த ஒரு செயலை செய்ய முயலும் போது அது எப்படி நடந்து முடியும் என முன்பே உணரக்கூடிய ஒரு உணர்திறன் இருக்கும். சிலர் ஏதோ தவறாக நடக்கப்போகிறது என்பதை முன்பே சொல்லிவிடுவர். அப்போது நம் திட்டத்தை ஆராய்ந்து மறுசீரமைத்துச் சரியான படி அந்த வேலை நடக்க செயல்படுவது வழக்கம்.

இப்படிப்பட்ட உள்ளுணர்வு இருக்க அவருக்கு அறிவாற்றல், பகுத்தறிவு இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களுக்கு அடிப்படையிலேயே எதிர்காலத்தில் அல்லது நாம் எடுக்கக்கூடிய செயல்கள் எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என முன்கூட்டியே உணரக்கூடிய உள்ளுணர்வு இருக்கும். அப்படி எதையும் முன்கூட்டியே உணரக்கூடிய 5 ராசிகள் குறித்து இங்கு பார்ப்போம்.

​கடகம்

மனோகாரகனான சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசியினர் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பார்கள். இவர்கள் பொதுவாகவே எந்த ஒரு காரணமும் இல்லாமல் எதையும் எளிதில் உணரக்கூடிய மனப்பாங்கு கொண்டவர்களாக இருப்பார்கள்.

பொதுவாக கடக ராசியினரிடம் மற்றவர்கள் பேச விரும்புவார்கள். ஏனென்றால் கடக ராசிக்காரர்கள் மற்றவர்களின் உணர்ச்சிகளை எந்த விளக்கமும் இல்லாமல் புரிந்து கொள்ள முடியும்.

மீனம்

கடக ராசிக்காரர்களுக்குப் பிறகு, மீன ராசிக்காரர்கள்தான் உண்மையான உள்ளுணர்வு கொண்டவர்கள். எந்த விஷயமாக இருந்தாலும், அதில் தங்களின் நிலை என்ன என்பதை உணர பெரும்பாலும் தங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றுகிறார்கள்.

ஏதேனும் அசாதாரண நிகழ்வு நிகழப் போகிறது என்பதை இவர்களின் உள்ளுணர்வு பெரும்பாலான நேரங்களில் உணர்த்திவிடும். இவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது. தான் எடுக்கும் காரியங்களில் எந்தளவுக்கு வெற்றி கிடைக்குமென்பதை இவர்களுக்கு இயற்கையாகவே உணரக்கூடியவர்களாக இருப்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் பெரும்பாலும் பிறர் கூறும் பொய்களை எளிதில் கண்டறிபவர்களாக இருப்பார்கள். இவர்களிடமிருந்து எதையாவது மறைக்க நீங்கள் என்ன செய்தாலும், அவர்கள் அதை எப்படியும் உணர்ந்து, நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வார்கள்.

எனவே விருச்சிக ராசியினரிடம் எதையும் மறைப்பது மிகவும் கடினம். சுயமாக அறியக்கூடிய உள்ளுணர்வு கொண்ட இவர்களை யாராலும் அவ்வளவு சுலபமாக ஏமாற்ற முடியாது.

​துலாம்

துலாம் ராசியினர் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஓரளவு எளிதில் உணரக்கூடியவர்கள். எந்த ஒரு சிக்கலான சூழ்நிலையை கவனித்து அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயல்வார்கள்.

வாழ்க்கையைக் குறித்து நேர்மறையான அணுகுமுறையின் காரணமாகவும், இவர்களின் உள்ளுணர்வு திறன் காரணமாக சூழலை உணர்ந்து நம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.

​மகரம்

மிகவும் நுணுக்கமானவர்கள் மகர ராசியினர். இவர்கள் எதிர்மறையான விஷயம் நடக்கும் என்பதை எளிதில் உணரக்கூடியவர்கள். அதனால் பெரும்பாலும் அப்பேர்ப்பட்ட செயலை செய்யமாட்டார்கள்.

அல்லது அவர்களின் திட்டத்தை மாற்றி அமைப்பார்கள். பெரும்பாலும் இவர்களின் உள்ளுணர்வைக் கேட்டுத் தான் செயல்படுவார்கள்.