வடமேல் மாகாண ஆளுநராக கரன்னாகொட நியமிக்கப்பட்டது தவறு: டிலான்
Prathees
2 years ago
ராஜா கொல்லூரின் மறைவால் வெற்றிடமாகிய வடமேல் மாகாண ஆளுநர் பதவிக்கு முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டிருக்கக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அந்த பதவிக்கு டியூ குணசேகர நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தற்போது நாடாளுமன்றத்திற்கு போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.
விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.