சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டும்;-தயாசிறி!!
Prabha Praneetha
2 years ago
தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது பொருத்தமானது என தானும் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் நாம் IMF உடன் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் ஏனைய நாடுகளின் ஆதரவு கொஞ்சம் குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என தனிப்பட்ட முறையில் தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.