இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் கோரிக்கை!
#Colombo
Mayoorikka
2 years ago
அரசாங்கத்திற்கும் இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்திற்கும் இடையில் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுள்ளது.
இந்த கலந்துரையாடலில் மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பிக்கும் போது இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உதவியை நாடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்கள் சங்கம் மூன்று அல்லது நான்கு தசாப்தங்களாக இந்தத் தொழிலில் இருப்பதால் ஆரம்பிக்கும் போது தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு குறித்த சங்கத்தின் பொருளாளர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
இக் கலந்துரையாடல் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.