சுவிஸ் வடமராட்சிக் கிழக்கு ஒன்றியத்தினரால் வடமராட்சி கிழக்கில் உதவிகள்.....!
சுவிஸ் வடமராட்சிக் கிழக்கு ஒன்றியத்தினாரால் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கிராம சேவகர் பிரிவு முதல் கேவில் வரையான பிரிவுகளில் பிரதேச செயலகத்தால் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மூவர் அடங்கலாக 13 பேருக்கான ரூபா இரண்டு மில்லியன் பெறுமதியிலான மலசல கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டதற்க்கான முடிவுறுத்தல் சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந் நிகழ்வு, இன்று காலை 10:30 மணிக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் திரு ஆ.இளங்கோ தலமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் திரு.கு. பிரபாகரமூர்த்தி, கிராம சேவகர்களான அ.விமலேசன், திருமதி காயத்திரி, திரு சுபேஸ்குமார், மற்றும் சுவிஸ் வடமராட்சி கிழக்கு சுவிஸ் ஒன்றிய பிரதிநிதிகள், யாழ் வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் திரு செல்வக்குமார், மற்றும் நலன்விரும்பிகள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.