நான்கு மடங்காக உயர்ந்துள்ள மாபிள்களின் விலை

#weather
Prathees
4 years ago
நான்கு மடங்காக உயர்ந்துள்ள மாபிள்களின் விலை

டைல்களின் விலை நான்கு மடங்காக உயர்ந்துள்ளதால்இ நிர்மாணத்துறை கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக டைல்ஸ் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் கார்மல் ஹுசைன் தெரிவித்தார்.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து உள்ளூர் டைல்ஸ் தொழிலை மேம்படுத்தும் நோக்கத்துடன் டைல்கள் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், நாட்டில் போதிய தேவை இல்லாததால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டைல்ஸ்களின் விலை கடந்த சில மாதங்களில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது என்றார்.

அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கொடட் மற்றும் டைல்ஸ் மூலம் சிறிய கழிப்பறை கட்ட முயன்ற சாதாரண மக்களால் அதைச் செய்ய முடியவில்லை என்றும் திரு ஹுசைன் கூறினார்.

டைல் வியாபாரம் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள 100,000 க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் அவர்கள் வேறு வேலைகளுக்குச் செல்வதால் எதிர்காலத்தில் இத்தொழிலில் திறமையான நிபுணர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4