இலங்கையில் பெரும் ஆபத்தாக மாறிவரும் எலிக் காய்ச்சல் - மாணவன் ஒருவர் பலி!
#SriLanka
#Death
Nila
2 years ago
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் ஒருவர் எலி காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையின் வைத்திய அதிகாரி தனபால ரத்நாயக்க இந்த தகவலை தெரிவித்தார்.
எதிமலை 60ஆம் பிரிவு ஜயமினிகம பிரதேசத்தைச் சேர் உதிமலை மகா வித்தியாலயம், 11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த டப்ள்யூ. எம். முத்திக்க லக்மால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாா்.
எலி காய்ச்சல் ஏற்பட்ட 14 நாட்கள் வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளாா்.