இலங்கையில் ரயிலையும் விட்டுவைக்காத டிப்பர் விபத்து!
#SriLanka
#Accident
Nila
2 years ago
மீரிகம புகையிரத கடவையில் இன்று காலை டிப்பர் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் ரயில் சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
டிப்பர் குறுக்கு வழியில் நின்றதால், விபத்தில் ரயிலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பிரதான ரயில் பாதையில் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
ரயில் கடவையை மீறி டிப்பர் பயணிக்க முட்பட்டதினாலேயே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயிலை மோதித் தள்ளிய டிப்பரினால் ரயில் பலத்த சேதமடைந்துள்ளதுடன் டிப்பர் சாரதி சிறுகாயங்களுடன் தப்பியுள்ளார்.