எரிவாயுவை கப்பலிலிருந்து இறக்க வேண்டாம்: லிட்ரோ நிறுவனத்திற்கு அதிரடி அறிவிப்பு!

#Litro Gas
Mayoorikka
2 years ago
எரிவாயுவை கப்பலிலிருந்து இறக்க வேண்டாம்: லிட்ரோ நிறுவனத்திற்கு அதிரடி அறிவிப்பு!

லிட்ரோ நிறுவனத்தினால் கப்பலில் கொண்டுவரப்பட்ட எரிவாயுவை தரையிறக்க வேண்டாம் என நுகர்வோர்  விவகார அதிகார சபை  அறிவிப்பு விடுத்துள்ளது.

இலங்கைக்கு கடந்த சனிக்கிழமை 3, 700 மெட்ரிக் டொன் எரிவாயுவை லிட்ரோ நிறுவனம் கப்பலில்  கொண்டுவந்திருந்த எரிவாயுவின் மாதிரியை இலங்கை தரநிர்ணய நிறுவனம் ஆய்வுக்கு உட்ப்படுத்தியது. 

அந்த ஆய்வில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயு  இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் தரநிலையுடன் பொருத்தமற்றத்து என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, எரிவாயுவை கப்பலிலிருந்து தரையிறக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனத்துக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை  அறிவிப்பு விடுத்துள்ளது.