இன்று உறுதி செய்யப்பட்ட ஒமிக்ரோன் தொற்று பற்றிய தகவல்கள் இதோ.!

#Omicron
Prathees
2 years ago
இன்று உறுதி செய்யப்பட்ட ஒமிக்ரோன் தொற்று பற்றிய தகவல்கள் இதோ.!

இலங்கையில், ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்ட மூவர் தொடர்பான மேலதிக தகவல்கள் தேடப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வெளிநாட்டவர். தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். மற்றவர் இலங்கைக்கு வந்தவர்.  மூன்றாவது நபர் அவரது நண்பன். இவர்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

முதலில் அடையாளம் காணப்பட்ட நோயாளி ஒரு தனி நோயாளி. தற்போது மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

"கடந்த தினங்களில்  நாங்கள் முதலில் சந்தித்த நோயாளியைத் தவிர, இப்போது மூன்று புதிய நோயாளிகள் உள்ளனர். விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் இரண்டு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்."

இந்த ஒமிக்ரோன் நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்ட பகுதிகளை நாங்கள் இன்னும் அடையாளம் காணவில்லை.

வெளியூர் சென்றவர்களின் உறவினர்களை தொற்றுநோய் தடுப்பு பிரிவு தேடிஇ ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வு நடத்தி வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.