ஜனாதிபதிக்கு பொருளாதார அறிவு இல்லை.. அவரால் நாட்டை ஆள முடியாது
பொருளாதாரம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவின் இயலாமை செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தப்பட்டது. பெரும்பாலான ஊடகங்கள் இதை மூடிமறைத்தன.
திறமையற்ற ஒருவனின் இயலாமையை மூடி மறைத்து நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு ஊடகங்களே பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொருளாதாரத்தை இயக்க அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒரு பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கு வேலை இல்லை.
கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. உள்ளூர் மற்றும் சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட இருந்தனர்.
இறுதியாக பொருளாதாரம் பற்றி இரண்டு அல்லது மூன்று கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் பதில்?
பொருளாதாரம் பற்றிய கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியாவிட்டால், நாட்டை எப்படி ஆள்வது? ஆனால் ஊடகங்கள் இதை மூடிமறைத்தன.
திறமையற்ற ஒருவரின் இயலாமையை மூடிமறைத்து, அவர் நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு ஊடகங்களே பொறுப்பேற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.