மட்டக்களப்பு கடற்பகுதியில் மர்ம கப்பலா?
மட்டக்களப்பு கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள கப்பலொன்றிற்கு கரையிலிருந்து மணல் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்படுவதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியான செய்திகளை பாதுகாப்பு அமைச்சு இன்று மறுத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், மட்டக்களப்பு கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள கப்பல் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.
கடலில் இருந்து மணல் அள்ளப்பட்டு வருவதாகவும், மற்றொரு கப்பல் மணல் ஏற்றி வருவதாகவும், அரசு அதிகாரிகள் அங்கு சென்ற போது, ஆயுதம் தாங்கிய சீருடை அணிந்தவர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர்,” என்று அவர் குற்றம் சாட்டினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து பங்களாதேஷுக்கு கப்பலின் பயணத்தின் போது ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறையைத் தொடர்ந்து அவசரநிலையை எதிர்கொண்டதால் சில நாட்களுக்கு முன்பு படகு நங்கூரமிடப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் உள்ள உள்ளூர் கப்பல் முகவரான விக்டரி ஏஜென்சீஸ் நிறுவனத்திடம் இருந்து எரிபொருள் நிரப்பிய பின்னர் இந்த படகு தனது இலக்கை நோக்கி பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொது மக்களை அறிவுறுத்துவதாக அமைச்சு தெரிவித்துள்ளது