4 லட்சம் பேருக்கு குடியுரிமையா? கனடிய‌ அரசின் அதிரடி அறிவிப்பு..

Keerthi
2 years ago
4 லட்சம் பேருக்கு குடியுரிமையா? கனடிய‌ அரசின் அதிரடி அறிவிப்பு..

வரும் 2022-ஆம் ஆண்டில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு கனடா நாட்டு குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக கனடா அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளமையானது கனடா வர காத்திருப்போருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதன்படி  வரும் ஆண்டில் வெளிநாடுகளைச் சேர்ந்த 4,11,000 பேருக்கு கனடா நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
வரும் 2022-ஆம் ஆண்டில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு கனடா நாட்டு குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக கனடா அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளமையானது கனடா வர காத்திருப்போருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதன்படி வரும் ஆண்டில் வெளிநாடுகளைச் சேர்ந்த 4,11,000 பேருக்கு கனடா நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

   
கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சரும், பிற மாகாண மற்றும் பெடரல் தலைவர்களும் கூடி புதிய அட்லாண்டிக் புலம்பெயர்தல் திட்டம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன் இருந்த ஒத்திகை திட்டமான Atlantic Immigration Pilot (AIP) என்னும் திட்டம் நிரந்தரமாக்கப்பட்டு, அந்த திட்டம் அட்லாண்டிக் புலம்பெயர்தல் திட்டம் (Atlantic Immigration Program) என பெயரிடப்பட்டுள்ளது.

கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser, பிற மாகாண மற்றும் பெடரல் தலைவர்கள் ஆகியோர் கூடி, 2022 ஜனவரி 1 முதல், Atlantic Immigration Pilot (AIP) என்னும் திட்டம் நிரந்தரமாக்கப்படுவதுடன், அது இனி அட்லாண்டிக் புலம்பெயர்தல் திட்டம் (Atlantic Immigration Program) என அழைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.

கனடாவின் அட்லாண்டிக் கனடா பகுதியில் ஏராளமான பணியாளர்கள் ஓய்வு பெறும் நிலையில் அங்கு புதிதாக சில பணியாளர்களே வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் , Newfoundland and Labrador, Prince Edward Island, New Brunswick, மற்றும் Nova Scotia ஆகிய நான்கு கிழக்குக் கடற்கரை மாகாணங்களில் அதிகளவில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை இதற்கு முன் கனடாவில் புலம்பெயர்தல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், புலம்பெயர்வோரை தக்கவைக்க அட்லாண்டிக் கனடா தடுமாறியே வந்தது.

இந்நிலையில் , Atlantic Immigration Pilot (AIP) என்னும் திட்டம் தொழிலாளர்களை தக்க வைக்கும் முயற்சியில் வெற்றிபெற்றுள்ளதற்கான அறிகுறிகள் தெரிவதாக கனடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

அதேவேளை , கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser இந்த Atlantic Immigration Pilot திட்டம் நிரந்தரமாக்கப்பட இருப்பதுடன், அது இனி அட்லாண்டிக் புலம்பெயர்தல் திட்டம் (Atlantic Immigration Program) என அழைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.