பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை - விஜயதாச ராஜபக்ஷ!
சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்யும் எண்ணம் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
அவர்கள் உண்மையாகவே அவ்வாறு செய்ய விரும்பினால், தான் முன்பு அறிமுகப்படுத்திய புதிய சட்டமூலத்தை செயல்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, தற்போதைய அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் அதை கடுமையாக எதிர்த்ததாகவும், அதற்கு பதிலாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரியதாகவும் கூறினார்.
பாராளுமன்ற விவாதத்தை நினைவு கூர்ந்த ராஜபக்ஷ, இனி போர் இல்லாத ஒரு நாட்டில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தேவையில்லை என்று தற்போதைய வெளியுறவு அமைச்சர் விஜயத ஹெரத் வாதிட்டதாகவும் குறப்பிட்டார்.
மேலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தற்போது பயன்படுத்துவதை விமர்சித்ததோடு, அதன் விதிகளின் கீழ் தனிநபர்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறினார்.
விசாரணைகளின் போது கசியவிடப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களைக் குறிப்பிட்டு, ஒரு முன்னாள் உளவுத்துறை அதிகாரி கடுமையான சூழ்நிலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே