"டக்யூலா மீன்".. மீண்டும் மீட்டெடுத்த விஞ்ஞானிகள்.. குவியும் பாராட்டு..!!!

Keerthi
2 years ago
"டக்யூலா மீன்".. மீண்டும் மீட்டெடுத்த விஞ்ஞானிகள்.. குவியும் பாராட்டு..!!!

பதினெட்டு வருடங்களுக்கு முன் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மீன் ஒன்றை மெக்ஸிகோ விஞ்ஞானிகள் மீண்டும் வெற்றிகரமாக மீட்டெடுத்து சாதனை படைத்துள்ளனர்.

டக்யூலா ஸிபிளிட்ஃபின் என்ற 3 அங்குல மீன் மெக்ஸிகோவின் ட்யூசிட்லன் என்ற ஆற்றில்காணப்பட்டது. இந்த மீன் நீர் மாசுபாடு, ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் இனம் அழிந்து வந்தது. கடந்த பல வருடங்களாக டக்யூலா மீன் தென்படாததால் 2003-ஆம் ஆண்டு இந்த மீன் இனம் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையறிந்த செஸ்டர் விலங்கியல் பூங்கா மற்றும் மகோகன் பல்கலைக்கழகம் தங்களிடமிருந்த டக்யூலா மீன்களை சொற்ப எண்ணிக்கையில் மெக்ஸிகோவுக்கு வழங்கியது. தற்போது மெக்ஸிகோவில் இந்த இன மீன் மீண்டும் ஆயிரக்கணக்கில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.