அபுதாபியில் ஆளில்லா விமான கண்காட்சி.. 26 நாடுகள் பங்கேற்பு.!!!

Keerthi
2 years ago
அபுதாபியில் ஆளில்லா விமான கண்காட்சி.. 26 நாடுகள் பங்கேற்பு.!!!

அபுதாபியில் இஸ்ரேல் உட்பட 26 நாடுகள் கலந்துகொள்ளும் ஆளில்லா விமான கண்காட்சி கருத்தரங்கு நாளை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் இருக்கும் தேசிய கண்காட்சி மையத்தில் ஆளில்லாத விமானத்தை இயக்குவது குறித்த பயிற்சி, கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நாளை தொடங்கவிருக்கிறது. இந்த கண்காட்சியானது தொடர்ந்து ஐந்தாவது வருடமாக நடக்கிறது. இதில் 26 நாடுகளிலிருந்து 134-கும் அதிகமான வர்த்தக நிறுவனங்கள் கலந்து கொள்கிறது.

இக்கண்காட்சியில், ஆஸ்திரியா, துருக்கி, பக்ரைன், இஸ்ரேல், பல்கேரியா, மால்டா மற்றும் செர்பியா ஆகிய நாடுகள் முதல் தடவையாக கலந்துகொள்கிறது. ஆளில்லா விமானம் குறித்த பல்வேறு தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு சவால்கள், நவீனமயமான திட்டங்கள் போன்ற பல விஷயங்கள் இக்கண்காட்சியில் நடக்கும். மேலும், கருத்தரங்கில் விவாதம் நடைபெறும். அதில் 150 க்கும் அதிகமான வல்லுனர்கள் கலந்து கொள்கிறார்கள்.