சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதிதவின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பில் புஷ்பிகாவிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை

Prathees
4 years ago
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதிதவின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பில் புஷ்பிகாவிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை

சமுதிதவின் வீடு தாக்கப்பட்டது தொடர்பாக புஷ்பிகாவிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது

சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பிலியந்தலை பொலிஸார், திருமணமான அழகுராணி புஷ்பிகா டி சில்வாவிடம் நேற்று (28) இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

சமுதித சமரவிக்ரமவின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ள விரும்புவதாக புஷ்பிகா டி சில்வாவிற்கு முன்னதாக அறிவித்திருந்தனர்.

எனினும் பொலிசார் வழங்கிய அன்றைய தினம் வாக்குமூலத்தை வழங்க வராத அவர், நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் சட்டத்தரணிகள் ஊடாக பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.

பின்னர், மாலை 5.30 மணி வரை அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

திருமதி புஷ்பிகா டி சில்வாவுடன் திரு.சமுதித சமரவிக்ரம பல யூடியூப் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் அந்த கலந்துரையாடல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

அண்மையில் பிலியந்தலையில் உள்ள சமுதித சமரவிக்னராமவின் வீட்டிற்கு இனந்தெரியாத குண்டர்கள் குழுவொன்று புகுந்து கற்களால் வீசித் தாக்கி வானத்தில் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4