மீண்டும் 120 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் ஒன்றின் விலை

Prabha Praneetha
2 years ago
மீண்டும் 120 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் ஒன்றின் விலை

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

டீசல் லீற்றர் ஒன்றிற்கான நட்டம் 120 ரூபாய் என்ற போதிலும் ஒரு லீற்றர் டீசல் 55 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலைகள் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலுக்கு ஏற்பட்ட நட்டத்தை மட்டுமே ஈடுசெய்யும்.