அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 15.03.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 15.03.2022

மேஷம்:

அசுவினி: குடும்பத்தில் பெரியோர்களின் விருப்பத்தை நிறைவேற்றி ஆசி பெறுவீர்கள்.
பரணி: முயற்சி ஒன்றில் எதிர்பாராத விதத்தில் வெற்றி கிடைக்கும்.
கார்த்திகை 1: பொது வாழ்வில் ஈடுபடுவோருக்கு புகழ், மரியாதை அதிகரிக்கும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: உற்சாகமான நாள். பொறுப்புடன் கடமையில் ஈடுபடுவீர்கள்.
ரோகிணி: வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழிலில் லாபம் காண்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: நீண்டநாள் முயற்சி வெற்றி பெறும். மனைவி வழியில் உதவி உண்டு.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: மனதில் தெளிவு பிறக்கும். ஆன்மிக எண்ணம் மேலோங்கும்.
திருவாதிரை: பெற்றோரின் ஆதரவு பெருகும். தொழிலில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: பிறருடைய நம்பிக்கையை பெறுவதற்கு அதிகமாகப் பாடுபடுவீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: பணியிடத்தில் எதிர்பார்த்திருந்த புதிய பொறுப்பு கிடைக்கும்.
பூசம்: முயற்சியில் தடைகள் நீங்கும். பிரபலமான மனிதர்களைச் சந்திப்பீர்கள்.
ஆயில்யம்: அனுபவ அறிவால் பிரச்னைக்கு தீர்வு பெறுவீர்கள். பதட்டம் வேண்டாம்.

சிம்மம்:

மகம்: நல்ல செய்தி வீடு தேடி வரும். சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
பூரம்: பலநாள் பிரச்னை ஒன்றைச்சமாளித்து நிம்மதி காண்பீர்கள்.
உத்திரம்1: உங்கள் நேர்மையான முயற்சிக்கு நல்லவர்கள் உதவுவார்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: நல்ல நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறத் தொடங்கும் நாள்.
அஸ்தம்: அரசாங்கம் சம்பந்தப்பட்ட முயற்சியில் அனுகூலம் உண்டு.
சித்திரை 1,2: பலநாள் திட்டம் நிறைவேறும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: அலுவலகத்தில் மதிப்பு கூடும். சாதனையில் ஈடுபடுவீர்கள்.
சுவாதி: உடன் பிறந்தவர்கள் பற்றிய கவலை வேண்டாம். உடல்நிலை திருப்தி தரும்.
விசாகம் 1,2,3: முயற்சியால் முன்னேற்றம் உண்டு. செலவு அதிகமாகும்.

விருச்சிகம்:

விசாகம் 4: குடும்பத்தினரின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். மகிழ்ச்சி கூடும்.
அனுஷம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். நல்ல முடிவுகள் எடுப்பீர்கள்.
கேட்டை: தடைகளை படிக்கட்டுகளாக மாற்றி செயல்படுவீர்கள்.

தனுசு:

மூலம்: நேர்மை அதிகரிக்கும். வாகனப் பயணத்தில் கவனம் தேவை.
பூராடம்: யாரிடமும் விவாதம் வேண்டாம். கவலை வந்து நீங்கும்.
உத்திராடம் 1: நண்பர்கள் புரிந்து கொள்ளாததால் பிரச்னைகள் வரக் கூடும்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: அதிகமாக உழைப்பீர்கள். பணவரவு கூடும்.
திருவோணம்: பண வரவு அதிகரிக்கும் நாள். அமைதி கிடைக்கும்.
அவிட்டம் 1,2: புதிய முயற்சிகளில் வேகமான முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: நெடுநாள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பாராட்டு மழையில் நனைவீர்கள்.
சதயம்: வழக்கத்தை விட அதிகமாக உழைத்து வருமானத்தை பெருக்குவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: நண்பருக்குத் தாழ்வு மனப்பான்மை வராமல் பாதுகாப்பீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: தைரியம் அதிகரிக்கும். உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள்.
உத்திரட்டாதி: விடாமுயற்சியுடன் சாதனை புரிவீர்கள். அதற்கான பணபலன் கிடைக்கும்.
ரேவதி: கடந்த கால உழைப்பின் பயன் கிடைக்கும். உறவினரால் பாராட்டப்படுவீர்கள்.