அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 21.03.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 21.03.2022

மேஷம்
அசுவினி: அலுப்பும் சலிப்பும் வராமல் காத்துக் கொள்ளுங்கள்.
பரணி: திட்டம் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும்.
கார்த்திகை 1: சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4: குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் ஏற்படும் நாள்.
ரோகிணி: தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பணியில் முன்னேற்றம் உண்டு.
மிருகசீரிடம் 1,2: சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள். கலகலப்பான நாள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: தந்தையுடன் கருத்து வேற்றுமை எதுவும் வேண்டாம்.
திருவாதிரை: கனவுகள் நனவாக இன்னும் சற்று அதிக முயற்சி வேண்டும்.
புனர்பூசம் 1,2,3: மனதில் நல்ல எண்ணங்களும், கருணையும் அதிகரிக்கும்.

கடகம்
புனர்பூசம் 4: உடல் நலனில் கவனம் தேவை. பணியில் முன்னேற்றம் உண்டு.
பூசம்: மற்றவர்களின் பேச்சுக்கு மதிப்பளிப்பீர்கள், திருப்திகரமான நாள்.
ஆயில்யம்: மற்றவர் நலனுக்காக பாடுபடுவீர்கள். எதிர்பாராத நன்மை உண்டு.

சிம்மம்
மகம்: தந்தையின் உடல்நலனில் அக்கறை கொள்வீர்கள். பங்குதாரரிடம் இருந்து நற்செய்தி வரும்.
பூரம்: வாழ்வில் உயரக் காரணமானவர்களிடம் நன்றி பாராட்டுவீர்கள்.
உத்திரம்1: எதிர்பார்த்த நற்பெயர் கிடைப்பதில் இருந்த தாமதம் நீங்கும்

கன்னி
உத்திரம் 2,3,4: சில நண்பர்கள் நம்பகமானவர் என்பதை உணர்வீர்கள்.
அஸ்தம்: அதிகமாக உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
சித்திரை 1,2: பிரியமானவர்களின் அன்பைப் பெற்று மகிழ்வீர்கள்.

துலாம்
சித்திரை 3,4: பயணம் செல்லும் திட்டங்களில் மாற்றம் இருக்கும்.
சுவாதி: பணியாளர்கள் பணியிடத்தில் சற்று நிதானத்துடன் பேச வேண்டும்.
விசாகம் 1,2,3: வெளியிடங்களில் செல்வதற்கு இருந்த தடைகள் நீங்கும்.

விருச்சிகம்
விசாகம் 4: எதிலும் நிதானம் தேவை. பணவரவுகள் சுமாராக இருக்கும்.
அனுஷம்: அடமானத்தில் இருக்கும் நகைகளை மீட்க முயற்சிப்பீர்கள்.
கேட்டை: திட்டங்களில் தடை வந்தாலும் கூடுதல் முயற்சியால் முடிப்பீர்கள்.

தனுசு
மூலம்: பொது இடங்களில் இன்று எந்தவித பிரச்னைகளிலும் ஈடுபட வேண்டாம்.
பூராடம்: பழைய பிரச்னைகள் இன்று தலைதுாக்கினாலும் அதை தகர்ப்பீர்கள்.
உத்திராடம்1: பணிகளை இழுத்துப்போட்டு பார்க்கவேண்டி இருக்கும்

மகரம்
உத்திராடம் 2,3,4: புது முடிவுகளை ஒத்திப்போடுங்கள். அமைதி கூடும் நாள்.
திருவோணம்: குடும்பத்திற்கு இனிய செய்தி வந்து சேரும் நாள்.
அவிட்டம் 1,2: அக்கம் பக்கத்தினரை அனுசரித்துப்போக வேண்டியிருக்கும்.

கும்பம்
அவிட்டம் 3,4: புண்ணியச் செயல்களில் முன்பைவிட ஆர்வம் கூடும்.
சதயம்: அதிகாரிகளுடன் சிறு சிறு வாக்குவாதம் வந்து நீங்கும்.
பூரட்டாதி 1,2,3: கடந்த நாட்களில் உங்களை வாட்டிய பிரச்னை தீரும்.

மீனம்
பூரட்டாதி 4: புது அனுபவம் பெறுவீர்கள். பேச்சில் கவனம் தேவை.
உத்திரட்டாதி: உங்களை மற்றவர் புரிந்து கொள்ள அவகாசம் கொடுங்கள்.
ரேவதி: எதிர்பாராத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.