அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்த யோசனை

Mayoorikka
2 years ago
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்த யோசனை

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்துவதற்கான யோசனை திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புத்தாண்டு காலப்பகுதியில் குறைந்த விலையில் அரிசி விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளைஅரச கையிருப்பு அரிசி தொகையினை மொத்த விற்பனை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.