அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 29.03.2022

#Todayrasipalan #Rasipalan #Dailyrasipalan
Reha
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 29.03.2022

மேஷம்: 
அமைதி கிடைக்க ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். எதிர்பாராத விதத்தில் செலவுகள் ஏற்படும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.
திட்டங்கள் நிறைவேறும் நாள்.

ரிஷபம்: 
திட்டமிட்ட காரியத்தில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியான பயணமொன்றால் லாபம் உண்டு. புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சாதித்துக் காட்டும் நாள்.

மிதுனம் : 
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியம் இன்று நடைபெறும். விலை  உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கடகம்: 
முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பிறருக்குப் பொறுப்புச் சொல்வதால் பிரச்சினைகள் உண்டு. போராட்டமான நாள்.

சிம்மம்: 
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். ஊதிய உயர்வுடன் கூடிய வேலைக்கு அழைப்பு வரலாம்.
திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி: 
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளை செய்ய முன்வருவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். பயணம் பலன் தரும்.
திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்: 
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். சேமிப்பு உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமோ, வராதோ என்று நினைத்த பணம் ஒன்று கைக்கு வரும்.
மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்: 
நன்மைகள் கிடைக்க நந்தியை வழிபட வேண்டிய நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். கண்ணியமிக்க நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு: 
மதிநுட்பத்தால் மகத்தான காரியங்ளைச் செய்து முடிக்கும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. உத்தியோகத்தில் வரவேண்டிய சம்பளப் பாக்கிகள் வரலாம்.
வெற்றிக்கு வித்திடும் நாள்.

மகரம்: 
சிவாலய வழிபாட்டினால் சிந்தை மகிழும் நாள். அலைபேசி மூலம் அனுகூலத் தகவல் உண்டு. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வாகனப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.
புதிய பாதை தெரியும் நாள்.

கும்பம்: 
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். உறவு பகை பாராமல் உதவி செய்ய முன்வருவீர்கள். தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும். உத்தியோகத்தில் நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
சிக்கனம் தேவைப்படும் நாள்.

மீனம்: 
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரலாம்.
பொறுமைத் தேவைப்படும் நாள்.