அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 31.03.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 31.03.2022

மேஷம்
அசுவினி: இன்று புண்ணிய செயல்களில் குடும்பத்துடன் ஈடுபடுவீர்கள்.
பரணி: புதிய முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது. குதுாகலமான நாள்.
கார்த்திகை 1: எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். அமைதியான நாள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். உங்களுக்கு பாராட்டு கிடைக்கும்.
ரோகிணி: நீண்ட நாள் பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: உங்களின் திட்டம் நிறைவேறும். ஆன்மிக நாட்டம் கூடும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: பொதுநல உணர்வு மேலோங்கும். யாரிடமும் வீண் பிரச்னை வேண்டாம்.
திருவாதிரை : சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள்.
புனர்பூசம்1,2,3: புதிய அனுபவப் பாடம் பெறுவீர்கள். சோர்வு நீங்கும் நாள்.

கடகம்: 
புனர்பூசம் 4: தடைகளை தகர்த்தெறிய சிறப்பாக முயற்சி செய்வீர்கள்.
பூசம்: புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள்.
ஆயில்யம்: பணிச்சுமை காரணமாகப் பொறுப்பை மற்றவரிடம் விடாதீர்கள்.

சிம்மம்: 
மகம்: உங்களுக்கு சிக்கல் உண்டாக்கும் எந்த செயலையும் செய்ய வேண்டாம்.
பூரம்: உற்சாகம் மிகுந்த நாள். எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள்.
உத்திரம் 1: மற்றவர்களுக்கு உதவினாலும் அவப்பெயர் கிடைக்கக்கூடும்.

கன்னி
உத்திரம் 2,3,4: தெய்வ பலம் கூடும் நாள். நிதி நிலை சீராகும்.
அஸ்தம்: சிந்தித்து முடிவெடுத்து பிரச்னையில் இருந்து வெளியே வருவீர்கள்.
சித்திரை 1,2: உங்களின் கனவுகள் நனவாக சிறிது காலம் பொறுங்கள்.

துலாம்
சித்திரை 3,4: பணி சிறக்கும். மற்றவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். .
சுவாதி: பிறரது பேச்சுக்கு அதிக மதிப்பு அளிக்க வேண்டாம்.
விசாகம்1,2,3: எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தாமதம் இருக்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: சிறிய அளவில் சுபச்செலவு செய்ய வேண்டிவரும்.
அனுஷம்: நல்ல காலம் பிறந்து விட்ட அடையாளம் இன்று தெரிய வரும்.
கேட்டை: வீட்டிலும், வெளியிலும் நிம்மதி கூடும். சுறுசுறுப்பான நாள்.

தனுசு
மூலம்: பொறுமை அவசியம். குடும்பத்தில் இருந்த பிரச்னை தீரும்.
பூராடம்: சிலரை நம்புவதற்கில்லை என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.
உத்திராடம் 1: அதிகம் உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது.

மகரம்
உத்திராடம் 2,3,4: பிரியமானவர்களின் அன்பைப் பெறுவீர்கள்.
திருவோணம்: சிறுசிறு சிரமங்கள் இருந்தாலும் உற்சாகம் குறையாது
அவிட்டம் 1,2: பணியாளர்கள் பிறரிடம் நிதானத்துடன் பேசவேண்டும்.

கும்பம்
அவிட்டம் 3,4: பயணத்தில் சிறு தடை ஏற்பட்டாலும் வெற்றிகரமாக நிறைவேறும்.
சதயம்: குடும்பத்தில் இருந்து வந்த சங்கடமான சூழல் மாறும்.
பூரட்டாதி 1,2,3: திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

மீனம்
பூரட்டாதி 4: பிள்ளைகளுக்கு திருமணம் ஏற்பாடாக வாய்ப்புள்ளது.
உத்திரட்டாதி: நண்பர் ஒருவர் மூலம் உங்களது வாழ்வில் முன்னேற்றம் வரும்.
ரேவதி: வருமானம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.