பஸிலின் சம்மந்தி ‘றோ’வின் புள்ளி! சர்ச்சையைக் கிளப்புகின்றார் விமல்; லிட்றோ நிறுவனத்தையும் இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசு முயற்சி எனவும் குற்றச்சாட்டு

#Wimal Weerawansa #Basil Rajapaksa
Prasu
2 years ago
பஸிலின் சம்மந்தி ‘றோ’வின் புள்ளி! சர்ச்சையைக் கிளப்புகின்றார் விமல்; லிட்றோ நிறுவனத்தையும் இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசு முயற்சி எனவும் குற்றச்சாட்டு

"நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இரு மகள்களில் ஒருவர் இந்தியப் பிரஜையையும், மற்றொருவர் பிரிட்டன் பிரஜையையும் திருமணம் முடித்துள்ளனர். இந்தியாவில் திருமணம் முடித்துள்ள மகளின் மாமனார், ‘றோ’ உளவு அமைப்பின் பிரதானியாவார்."

- இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

இந்நிலையில், லிட்றோ நிறுவனத்தையும் இந்தியாவுக்கு வழங்குவதற்கு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முயற்சித்து வருகின்றார் என்றும் விமல் எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

"நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் பதவியைப் பறிப்பதால் மாத்திரம், நாட்டை நெருக்கடி நிலைமைகளில் இருந்து மீட்க முடியாது. பஸில் என்கிற பல்லை பிடுங்குவதால் மாத்திரம் வாய் சுத்தமாகாது.

இலங்கை கேட்கும் போதெல்லாம், கடன்களை இலங்கைக்கு வாரி வழங்குவதற்கு இந்தியாவுக்குப் பைத்தியமா? இலங்கையில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய தேவைகள் இந்தியாவுக்கு இருக்காதா? அதனடிப்படையில், லிட்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசு தயாராகி வருகின்றது" – என்றார்.