நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெல்ல பெரும்பான்மையினர் தயாராக உள்ளனர்

Mayoorikka
2 years ago
நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெல்ல பெரும்பான்மையினர் தயாராக உள்ளனர்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 சுயேச்சைகளின் ஆதரவு நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும் நாட்கள் வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீர்மானம் எவ்வாறு கையளிக்கப்படும், கையளிக்கப்பட்டதன் பின்னர் ஏற்படும் நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.