இடைக்கால நிர்வாகத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இருக்கிறார்..- பசில்

#SriLanka #Mahinda Rajapaksa #Basil Rajapaksa
இடைக்கால நிர்வாகத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இருக்கிறார்..- பசில்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் சுயேச்சை உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச மகாநாயக்கர்கள் மற்றும் மதத் தலைவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அந்த முடிவை எடுப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு நடந்தால், புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் மஹிந்த ராஜபக்ச இன்னும் சிறிது காலத்திற்கு முன்னிறுத்தப்படுவார் எனவும், வேறு எவரும் முன்னிறுத்தப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவே அடுத்த பிரதமராக வருவார் என்பதால் மக்கள் ஆணையைத் தவிர வேறு யாரையும் முன்னிறுத்த கட்சி தயாராக இல்லை என்றும் அவர் தேர்தலில் மக்களிடம் கூறியுள்ளார்.