எதிர்வரும் வாரம் அரசியலில் அதிரடி மாற்றங்கள்!

Prabha Praneetha
3 years ago
எதிர்வரும் வாரம் அரசியலில் அதிரடி மாற்றங்கள்!

ஜனாதிபதி, பிரதமர் பாதுகாப்பாகவே உள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீதிக்கிறங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

இடைக்கால அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ளது.

சர்வ கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் நாளை அல்லது நாளை மறுதினம் பிரதான எதிர்க்கட்சிகளுடன் விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

சாதகமான பதில் கிடைக்காவிடின் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 39 பேரையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!