நாளை நடைபெறவிருந்த நாடாளுமன்ற அமர்வுகள் ரத்து

Prabha Praneetha
2 years ago
நாளை நடைபெறவிருந்த நாடாளுமன்ற அமர்வுகள் ரத்து

நாளை நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இராஜினாமாவை அறிவிப்பதற்காக பாராளுமன்றத்தை நாளை கூட்டுவதற்கு முன்னதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், ஜூலை 13 ஆம் தேதி ராஜினாமா செய்யப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்த போதிலும் இன்னும் உத்தியோகபூர்வ ராஜினாமா செய்யவில்லை.