எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் மோதல்!

Prabha Praneetha
2 years ago
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் மோதல்!

நிட்டம்புவ – கலகெடிஹேன எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று ஏற்பட்ட கடும் மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை வரிசையில் நின்றவர்களிடையே ஏற்பட்ட அமைதியின்மையின்போது, கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டதில், இவ்வாறு ஐவர்  காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 காயமடைந்தவர்களில் 3 பேர் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையிலும் மேலும் இருவர் கம்பஹா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.