லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

Prabha Praneetha
2 years ago
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

இந்த மாத இறுதியளவில் நாட்டில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் லிட்ரோ எரிவாயு விநியோகத்தில் 50 வீதத்தை நிறைவு செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விநியோகம் தற்போது நாட்டின்பெரும்பாலான பிரதேசங்களில் இடம்பெறுகின்றன.

மேல் மாகாணத்தில் எரிவாயுவின் தேவை குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏனைய பிரதேசங்களுக்கு லிற்றோ எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை 3 நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.