ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் என எம்பிக்களுக்கு அச்சுறுத்தல்: சபாநாயகர் பொலிஸில் முறைப்பாடு

Prathees
2 years ago
ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் என எம்பிக்களுக்கு அச்சுறுத்தல்:  சபாநாயகர் பொலிஸில் முறைப்பாடு

பாராளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

இதன் காரணமாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இது தொடர்பான நிகழ்வுகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பதிவுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

எம்.பி.க்களுக்கு அழுத்தம் கொடுப்பது தவறு என்றும், சமூக வலைதளங்களில் மிரட்டல் கட்டுரைகள் வெளியிடப்படுவதைக் கண்காணித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.