ஜனாதிபதியிடம் முன்னாள் அமைச்சரின் முக்கிய கோரிக்கை

Mayoorikka
2 years ago
ஜனாதிபதியிடம் முன்னாள் அமைச்சரின் முக்கிய கோரிக்கை

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரைவாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு, முன்னாள் அமைச்சர் நிமல்ஸ்ரீபால டீ சில்வா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நிறுவனம் ஒன்றிடமிருந்து இலஞ்சம் பெற முயற்சித்தமை தொடர்பில், தனக்கு எதிராக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதாகவும் எனவே இந்த விடயம் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றை கோரி, தான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ளதாகவும் நிமல்ஸ்ரீபா டீ சில்வா தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவியைப் பெறுவதை விட தனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.