சுகாதார திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை

Prabha Praneetha
2 years ago
சுகாதார திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை

திருகோணமலையில் கோவிட் தொற்றாளர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருகோணமலை- அபயபுர பகுதியில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதால் சமூக இடைவெளிகளை பேணுமாறு திருவண்ணாமலை பிராந்திய வைத்திய பொறுப்பதிகாரி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

அத்துடன் , தொடர்ச்சியாக முகக்கவசங்களை அணியுமாறும், பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.