ஓய்வூதிய வயதை மீண்டும் குறைக்கிறது அரசு: இடைக்கால பட்ஜெட்டில் முன்மொழிவு?

Prathees
2 years ago
ஓய்வூதிய வயதை மீண்டும் குறைக்கிறது அரசு: இடைக்கால பட்ஜெட்டில் முன்மொழிவு?

அரசாங்கப் பணியாளர்கள்  ஓய்வு பெறும் வயதை 65 ஆக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 

இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் அரச சேவையின் ஓய்வு வயதைக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ள நிலையில், குறைக்கப்பட்ட வயது 55 அல்லது 60 என்று கூற முடியாது என  பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் அரச சேவையாளர்களின் ஓய்வு காலத்தை 60 வருடங்களில் இருந்து 2022 ஜனவரியில் இருந்து 65 வருடங்களாக நீடிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.